4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, பிரதமர் நரேந்த மோடி தமிழகம் வருகிறார்.
நான்கு நாள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள பிரதமர், ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் கட்சி தலைவைவர்களும் வேட்பாளர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக சார்பில் பிரதமர் மற்றும் அமித் ஷா இருவரும் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வரவிற்கிறார்.

You May Also Like

More From Author