நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் நேற்று (மே 14, 2026) உலகம் முழுவதும் வெளியாக இருந்தது.
ஆனால், பைனான்ஸ் பிரச்னை காரணமாக படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்த பிரெச்சனைகள் நடப்பதை சரியாக வடமாநில திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிட்டு விட்டனர்.
இதனால் பைரஸி ஆகிவிடுமோ என தயாரிப்பாளர்கள் அஞ்சினர்.
தென்னிந்தியா நடிகர்கள் பலரும் சூர்யாவிற்காகவும், படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் எனவும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்துவிட்டு, சூர்யாவின் கருப்பு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழுவினரும், சூர்யாவும் உறுதி செய்துள்ளனர்.
‘கருப்பு’ இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது; படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு
