தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை 8 மற்றும் 11.25 மணி, மதியம் 1.50 , மாலை 4.15 மணி என 4 விமான சேவையும், தூத்துக்குடி-பெங்களூரு இடையே மதியம் 12.15 மணிக்கு ஒரு விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அதிகப்படியான பயணிகள் பயணிக்கக்கூடிய A321 ரக விமானங்களை இயக்க வேண்டும் என்றும், இரவு நேர விமானங்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரவு நேர விமான சேவையால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
