சீனா பசுமையான, சகிப்பு தன்மையுடைய, துடிப்பான நகர வளர்ச்சித் துறையில் பிற நாடுகளுக்கு குறிப்பாக தெற்குலக நாடுகளுக்கு மதிப்பு மிக்க அனுபவங்களை வழங்கியுள்ளது என்று ஐ.நா மனித உறைவிட பணியகத்தின் செயல் இயக்குநர் 19ஆம் நாள் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நான் முன்பு பெய்ஜிங், ஷாங்காய், வெய்ஹாய் ஆகிய இடங்களில் பயணம் மேற்கொண்ட போது, இந்நகரங்களின் வளர்ச்சியை பதிவு செய்துள்ளேன். இந்த நகரங்கள், இயற்கைக்கு நேயமான தீர்வு வழுமுறையின் மூலம் தொடரவல்ல எரியாற்றலின் பயன்பாட்டு அளவைப் பெரிதும் உயர்த்தி, எண்ணியல் புத்தாக்கத்தை நகர நிர்வாகத்தில் சேர்ப்பதன் மூலம், மக்களின் வாழ்க்கை தரத்தை இடைவிடாமல் முன்னேற்றியுள்ளன என்று கூறினார்.
2026ஆம் ஆண்டு உலகளாவிய நகரங்களின் தொடரவல்ல வளர்ச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் ஷாங்காய் மாநகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
