சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்குடன் மே 25ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில்,சீனா-பாகிஸ்தான் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75 ஆண்டுகளில், இருதரப்புகளின் உத்திசார் பரஸ்பர நம்பிக்கையும் நடைமுறை ஒத்துழைப்பும் இருநாடுகளின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளன என்றார். சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், அண்டை நாடுகளுடனான தூதாண்மை உறவுகளில் சீனா-பாகிஸ்தான் உறவின் வளர்ச்சிக்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிக்கும். இருதரப்பும் புதிய யுகத்தில் மேலும் நெருக்கமான சீனா-பாகிஸ்தான் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், மேலும் உயர் மட்டத்திலும் பரந்த துறைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்கவும், பிரதேச அமைதியையும் நிலைத்தன்மையையும் கூட்டாகப் பராமரிக்கவும் வேண்டும். மேலும், பாகிஸ்தான் பொறுப்பேற்று மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுக்க மேற்கொண்டுள்ள இணக்க முயற்சிகளைச் சீனா பாராட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
ஷாபாஸ் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை பாகிஸ்தான் உறுதியாக கடைப்பிடித்து வருகிறது என்றார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கீழுள்ள ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் கட்டுமானத்தை முன்னேற்றவும், இருநாட்டு மக்களுக்கும் பயனளிக்கவும், சீனாவுடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்றும், அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மேற்கொண்ட இணக்க முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிப்பதற்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
