சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவின் தொடர் வெற்றிக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் காரணம் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அதற்கு உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்பது இப்போதுதான் தெரிகிறது” என்று காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணமென நான் நினைத்துக்கொண்டிருந்தேன்; அதற்கு காங்கிரஸ் தான் காரணமென இப்போது தெரிகிறது; காங்கிரசை எந்த காலத்திலும் நம்பக்கூடாது, கிட்ட சேர்க்கக்கூடாது – சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில்… pic.twitter.com/TWRlWR1k3L
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 23, 2026
“>
மேலும், பதவி ஆசைக்காகத் துரோகம் செய்துவிட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியை இனி எந்தக் காலத்திலும் நம்பக் கூடாது என்றும், அவர்களைத் தங்களின் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்றும் அவர் மிகக் கடுமையான தொனியில் வலியுறுத்தியுள்ளார்.
