ஃபிஃபா உலகக்கோப்பையின் 16-வது சுற்று நாக்-அவுட் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிராக 2-0 என தாராளமாக முன்னிலை வகித்த எகிப்து அணி, ஆட்டத்தின் கடைசி 11 நிமிடங்களில் 3 கோல்களை கோட்டைவிட்டு 3-2 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, வீடியோ உதவி நடுவர்(VAR) தொழில்நுட்பம் மற்றும் கள நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் ஆகியோர் தங்களுக்கு பாரபட்சமாகச் செயல்பட்டதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹோசாம் ஹாசன் மற்றும் வீரர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கிறிஸ்டியன் ரொமேரோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் என்ஸோ பெர்னாண்டஸ் ஆகியோரின் அடுத்தடுத்த அதிரடி கோல்களால் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது.
ஆனால், எகிப்து பாசறையிலோ நடுவர்களின் முடிவுகள் திட்டமிட்டு தங்களை வீழ்த்தியதாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
FIFA 2026: அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது எகிப்து; VAR நடுவர் பாரபட்சமாக நடந்துகொண்டாரா?
