உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கியப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குத் தற்காலிகச் சுங்கக் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று ஈரான் திங்கட்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சேவைகளுக்கான கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, ஹார்முஸ் நீரிணையைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர ஈரான் முயல்வதாகவும், அங்கு செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பதாகவும் வெளியான தகவல்களை அடுத்து இந்த விளக்கம் வந்துள்ளது.
வணிகக் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை: ஈரான் திடீர் விளக்கம்
