இந்தியா தனது முதன்மைத் தொடரான வந்தே பாரத் ரயில்களை, குறிப்பாகப் பழைமையான ரயில்வே அமைப்புகளைக் கொண்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
பெரும் முதலீடுகள் தேவைப்படும் அதிவேக புல்லட் ரயில் வலையமைப்புகளுக்கு ஒரு மலிவான மாற்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான பொறியியல் ஆலோசனை நிறுவனமான RITES-ம், இந்திய ரயில்வேயும் இணைந்து, சர்வதேச சந்தைகளுக்காக வந்தே பாரத் ரயிலின் ஸ்டாண்டர்ட்-கேஜ் பதிப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது .
வந்தே பாரத் ரயில்கள் விரைவில் பங்களாதேஷ், நேபாளம், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இயக்கப்படலாம்
