ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த ட்ரோன் அணுமின் நிலையத்தின் 6 வது பவர் யூனிட்டில் உள்ள டர்பைன் ஹால் கட்டடத்தின் மீது மோதி வெடித்ததாக ரொசாட்டம் அமைப்பின் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டமிட்டத் தாக்குதலால் முதன்மை உபகரணங்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றாலும், டர்பைன் ஹால் சுவரில் ஒரு பெரிய துளை விழுந்துள்ளதாக ரஷ்யத் தரப்பு கூறியுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்?
