பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது புகழ்பெற்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ உரையின் 134வது எபிசோட் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் குடிமக்களுடன் உரையாடினார்.
இதில் இந்திய விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய மிகச்சிறந்த சாதனைகளுக்காக அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், “விளையாட்டு வீரர்கள் புதிய சாதனைகளைப் படைத்து, நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.” என்று கூறினார்.
இன்று காலை 11 மணியளவில் ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் மற்றும் பல முக்கிய டிஜிட்டல் தளங்கள் வழியாக இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நேயர்களைச் சென்றடைந்தது.
சாதித்துக் காட்டிய இந்திய வீரர்கள்.. 134-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!
