கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு, ஐந்து விமான பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு விமானம், பாகிஸ்தானின் கராச்சி கடற்கரைக்கு அப்பால் செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனது.
வழிசெலுத்தல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு குறித்து தெரிவித்ததை அடுத்து, அந்த போயிங் 737 ரக விமானம் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம், பலுசிஸ்தானில் உள்ள ஓர்மாரா அருகே அரபிக்கடலுக்கு மேல் காணாமல் போனது.
பாகிஸ்தான் கடற்கரை அருகே போயிங் சரக்கு விமானம் திடீர் மாயம்; தேடுதல் பணி தீவிரம்
