அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 23ஆம் நாள் நடைபெற்ற சர்வதேசக் கணிதவியலாளர்கள் மாநாட்டின் துவக்க விழாவில், சீனாவைச் சேர்ந்த டேங்யூ மற்றும் வாங்ஹோங் அம்மையார் உள்ளிட்ட 4 கணிதவியலாளர்கள் ஃபீல்ட்ஸ் விருதைப் பெற்றனர்.
இவ்விருதானது, சர்வதேசக் கணிதவியல் துறையில் வழங்கப்படும் உச்சநிலை விருதாகும். கணிதவியல் துறையில் நோபல் பரிசு என்று இது அழைக்கப்படுகிறது. முன்னதாக, சீன வம்சாவழியைச் சேர்ந்த கணிதவியலாளர்களான ட்சியூசேங்தோங், தாவ்செசிவான் ஆகியோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
