இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
விழாவில் பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி. சித்தர்கள், கவிஞர்கள் போன்றோர் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரி என தெரிவித்தார்.
மகாகவி பாரதியார் தேசியவாதத்தின் நெருப்பை புதுச்சேரியில் இருந்துதான் தொடங்கி வைத்தார் என்றும், மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் இணைந்து செயல்பட்டதால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறினார்.
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
