சீன கான்சு மாநிலத்திலுள்ள டோங்ஃபெங் எனும் வணிக விண்வெளி புத்தாக்க முன்னோடி மண்டலத்திலிருந்து ட்சுஜூயே-3 Y2 ஏவூர்தி ஆகஸ்ட் 19ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, இந்த ஏவூர்தியின் முதல் கட்ட பகுதி திட்டப்படி தரையிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டது. ஏவூர்தியின் தொடரவல்ல பயன்பாட்டு நுட்பத்தில் சீனா இன்னொரு முக்கிய முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது. சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த பிறகு, தரையிலிருந்து மீட்கப்பட்ட சீனாவின் முதலாவது ஏவூர்தியாக ட்சுஜூயே-3 என்பது குறிப்பிடத்தக்கது.
படம் :CFP
