2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி செப்டம்பர் 2 முதல் 6ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில், 2ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற உலக சேவை வர்த்தக மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
தற்போது, உலகப் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கு உந்து சக்தி பற்றாக்குறை உள்ளது. சேவை வர்த்தகம், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய உள்ளடக்கமாகும். சேவை தொழிலும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகளில் ஒன்ராகும். எண்ணியல், நுண்ணறிவு மற்றும் பசுமைசார் வளர்ச்சி முறை துரிதப்பட்டு வருகிறது. அதேவேளை, புதிய தொழில்நுட்பம், புதிய தொழில், புதிய வழிமுறை அடுத்தடுத்து தோன்றி வருகின்றன. இவை, பொருளாதாரத்தின் உலகமயமாக்கலை முன்னெடுத்து செல்வதற்கும் உலகப் பொருளாதாரம் மீட்சி பெற்றுவதற்கும் வலுவான உந்து ஆற்றலை கொண்டு வருகின்றன என்று ஷிச்சின்பிங் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு, சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்து 45ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. உயர் நிலையிலான திறப்புக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வரும் சீனா, நவீனமயமாக்கலை முன்னெடுத்துவரும் அதேவேளையில் பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதற்காக, மேலும் திறப்புத்தன்மை வாய்ந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிச் சூழலை உருவாக்கவும், பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி பெறும் ஒத்துழைப்பு உறவை நெருக்கமாக்கவும், புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை மேம்படுத்தும் வழிமுறையை வலுப்படுத்தவும், நவீனமயமாக்கல் கட்டுமானத்தில் வளர்ச்சி சாதனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் நாங்கள் பாடுபடுவோம் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, கதவைத் திறந்து விட்டால் வளர்ச்சி அடையும் ஆனால் கதவை மூடி விட்டால் வீழ்ச்சி அடையும். தடையற்ற வர்த்தகம் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைக் கூட்டாகப் பேணிக்காப்போம். உலக சேவை வர்த்தக வளர்ச்சியின் வரலாற்று வாய்ப்புகளைக் கூட்டாக பகிர்ந்துக் கொள்வோம். உலகிற்கு மேலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்குக் கூட்டாக முயற்சி மேற்கொள்வோம் என்றும் வலியுறுத்தினார்.