தெற்கு காசா நகரமான ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது. ரஃபாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட நடவடிக்கைக்கு எகிப்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்க செய்தித் தொடர்பாளர், ரஃபாவில் தரைவழி தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் இது எப்போது நடக்கும் என்பதை குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், ரஃபாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை தங்கவைக்க 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.