பிரதமருடன் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் சந்திப்பு!

பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் ஹைதராபாத்தில் சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக அவரது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளின் செழுமை பற்றி கலந்துரையாடிதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author