வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இந்த புயல் நாளை(மே 26) அதிகாலை வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்றும், இதனால் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரெமல் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை கிழக்கு-மத்திய வங்கக் கடலில் கடுமையான சூறாவளி புயலாக மாறியது.
இது மேலும் தீவிரமடைந்து வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தின் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும், இன்று இரவுக்குள் சாகர் தீவு (இந்தியா) மற்றும் கெபுபாரா(வங்காளதேசம்) இடையே இது கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் ரெமல் புயல்
You May Also Like
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!
November 24, 2025
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா..!
December 1, 2025
தொடர்ந்து ஏறும் தங்க விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
January 7, 2026
