ஞானபுரீஷ்வரர் கோயிலில் நடந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி!

மயிலாடுதுறையில் உள்ள ஞானபுரீஷ்வரர் கோயிலில் “பார்வதி கல்யாணம்” என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது.

பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்ற பார்வதி தேவி, தவத்தின் பலனாக சிவபெருமானை அடைந்த இந்த புராண வரலாற்றை, கலைமாமணி விருதாளர் சோமசுந்தரம், பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு தத்ரூபமாக வெளிக்காண்பித்தனர். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

You May Also Like

More From Author