பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு

மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் ஈடுபட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பொது தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன.
வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை மக்களிடம் கருத்து கேட்டு கணிப்பது தான் தேர்தல் கருத்துக்கணிப்பு என்று கூறப்படுகின்றன.
இவை 100% எப்போதும் சரியாக இருப்பதில்லை. மேலும், மேலும் சமீபத்திய ஆண்டுகளில் இதில் பல தவறுகள் நடந்துள்ளன.
ஆனால், இந்தியாவில் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருந்தன.

You May Also Like

More From Author