குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்

குவைத்தில் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை கேரளாவுக்கு புறப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படுகின்றன இந்த செய்தியினை மத்திய அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் X இல் உறுதிப்படுத்தினார்.
இந்த விமானத்தில் அமைச்சரும் உடன் பயணிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், விமானம் தரையிறங்கும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உடலும், கேரளாவைச் சேர்ந்த 23 பேர் உடலும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடலும் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author