சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Author: Web Desk
ஐநா வெளியிட்ட அதிரடி கறுப்புப் பட்டியல் – கொந்தளிக்கும் நாடுகள்!
உலக அளவில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 29) தங்க விலை அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
சிவகாசி அருகே கோர விபத்து : 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஓட்டுநரால் விபத்து..!
சிவகங்கை அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விப்பாது ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் 10 நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்ததாக [மேலும்…]
தமிழ் சினிமா நடிகர் சத்தியேந்திரா காலமானார்
பிரபல பழம்பெரும் தமிழ் நடிகர் சத்தியேந்திரா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். [மேலும்…]
சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்
சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை என சனாதனம் கூறுவதாக நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார். சென்னையில் பிளாஸ்ட் [மேலும்…]
ஜப்பானிய வலது சாரியின் உளவுத் துறை அதிகாரத்தைத் திரட்டல்
சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலக இணையப் பயன்பாட்டாளர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன்படி உளவுத் துறையின் கடப்பாட்டை வலுப்படுத்த முயலும் [மேலும்…]
உளவு ஒருங்கிணைப்பு முறைமையை உருவாக்குவதில் ஜப்பான் கவனமாக செயல்பட வேண்டும்:சீனா வேண்டுகோள்
தேசிய நிலை உளவு ஒருங்கிணைப்பு முறைமையை உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் மே 28ஆம் [மேலும்…]
சீனா-அமெரிக்கா இடையே சுங்கவரி பற்றிய பேச்சுவார்த்தையின் முன்னேற்றம்
சீனா-அமெரிக்கா இடையே சுங்கவரி பற்றிய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றிய கேள்விக்கு சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யாடோங் மே 28ஆம் [மேலும்…]
கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு..!!
கர்நாடக முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2023ல் காங்கிரஸ் [மேலும்…]
அமெரிக்காவின் பல்வேறு துறையினர்களுடன் வாங்யீ கலந்துரையாடல்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பவையின் உயர்நிலை கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கிய காலத்தில், மே 27ஆம் நாள் அமெரிக்காவின் நெடுநோக்கு, [மேலும்…]
