வீடுகளுக்கு சோலார் பேனல்… ₹18,000 வரை சேமிக்கலாம்… பட்ஜெட்டில் அறிவிப்பு…!!! 

Estimated read time 1 min read

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

பிரதமரின் SGMB திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏழை எளிய நடுத்தர வருட குடும்பங்களின் மின்சார கட்டண செலவினம் கணிசமான அளவு குறைவதோடு (18 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்) . உபரியாற்றலை விற்பனை செய்ய முடியும் எனவும் பசுமை ஆற்றல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author