சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ள கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலியுடன் ஜூலை 28ஆம் நாள் முற்பகல் செங்தூ நகரில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, எரியாற்றல் தொழிலின் வளர்ச்சியுடன், கயானா பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது. தற்போது, சீனாவில் உயர் தர வளர்ச்சியின் மூலம் சீன பாணியுடைய நவீனமயமாக்கம் முன்னேற்றப்பட்டு வருகிறது. கயானாவின் வளர்ச்சிக்கும், சீன-கயானா ஒத்துழைப்புக்கும் இது புதிய வாய்ப்புகளை வழங்கும். உங்கள் சீனப் பயணம், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.