உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டிய 5 வயது பஞ்சாப் சிறுவன்  

உலகத்தின் உயரமாக சிகரங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமாக தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம்.

இந்த சிகரத்தை, மிக இளம் வயதில் ஏறிய நபர் என்று சாதனையை புரிந்துள்ளார் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங்.
டெக்பீர் சிங், கடந்த 18ஆம் தேதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற ஆரம்பித்து, 23ஆம் தேதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்துள்ளார்.

டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்கு துணையாக, அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார்.

டெக்பீர், அவரது தந்தை, இரண்டு வழிகாட்டிகள் மற்றும் இரண்டு துணைப் பணியாளர்கள் அடங்கிய குழு, ஆறு நாட்களில் மலையேற்றத்தை முடித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author