தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள்! திருச்சியில் பரபரப்பு

Estimated read time 0 min read

ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்த போது கடைசி மூன்று பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் தினமும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு இரவு 1:30 மணி அளவில் வந்து செல்லும்.

இந்த நிலையில் இன்று 1:30 மணி அளவில் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தனியாக கழன்றது.

இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே துறை அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் கழன்ற பெட்டிகளை உடனடியாக சரி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை சென்றது.

மூன்று பெட்டிகள் கழன்றதால் எந்தவித பாதிப்பும் மக்களுக்கு ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற ரயில் திருச்சி மாவட்டம் திருவரம்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அந்த ரயில் இன்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டு மாற்றுவரையில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில் பெட்டிகள் கலன்ற சம்பவம் ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author