சவரனுக்கு ரூ.80 உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது..

Estimated read time 0 min read

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுவருவதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி பட்ஜெட்டுக்கு பிறகான 5 நாட்கள் தங்கம் மளமளவென சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. ஆனால் தொடர்ந்து சரியும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய வகையில், அதன்பின்னர் தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டது.

அதிலும் கடந்த இரு வாரங்களில் கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ. 7 ஆயிரத்தை தாண்டி, ஒரு சவரன் ரூ. 57,000ஐ நெருங்கியது. அதன்படி கடந்த வாரம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,100க்கும், ஒரு சவரன் ரூ. 56,800 என்கிற புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் வெள்ளி விலையும் அதிரடியாக புதிய உச்சத்தை எட்டி ஒரு கிராம் வெள்ளி ரூ.102க்கு விற்பனையானது. அதன்பின்னர் கடந்த 2 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை, நேற்றி ஒரே நாளில் அதிரடியாக ரூ. 400 அதிகரித்தது. மீண்டும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.56,800ஆகவும், ஒரு கிராம் ரூ. 7,100ஆகவும் விற்பனை செய்யப்படது.

இந்நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,110க்கும், ஒரு சவரன் ரூ.56,880க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ரூ.57,000ஐ நெருங்குவது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author