அக்.6ல் விமான சாகச நிகழ்ச்சி.. மெரினாவில் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு..

Estimated read time 1 min read

இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி வருகின்ற 6-ம் தேதி  சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள விமான சாகச நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மெரினா கடற்கரையில் வருகின்ற 6 தேதி இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.  சென்னையில் 21 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் பேர் கண்டு களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான  பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, “ 15 லட்சம் பேர் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை மெரினா கடற்கரையில் பார்க்க உள்ளனர்.  இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் 20 தீயணைப்பு வண்டிகள், 20  ஆம்புலன்ஸ்  மற்றும் மருத்துவ குழு அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சர், தமிழக ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து  பார்ப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்திய விமான படையின் ஆண்டு விழா ஒன்றிய அரசின் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும்  பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் , மருத்துவ வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்களுக்கு அனைவருக்கும் விமானப்படை மூலம் கேப் வழங்கப்படும்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author