திருப்பதி கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 14-வது முறையாக பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒன்பது நாள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில் தனது மனைவியுடன் கோயிலுக்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் ஆந்திர மாநில அரசின் சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை வழங்கினார். பின்னர், 2025 ஆம் ஆண்டிற்கான திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.