திருப்பதி பிரம்மோற்சவ விழா – பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர்!

Estimated read time 0 min read

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் அருள்பாலித்தார்.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உற்சவரான மலையப்பர் ஆதிசேஷனாக கருதப்படும், பெரிய சேஷ வாகனத்தின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன சேவையின் முன், காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் செல்ல, அவர்களுக்கு பின் ஜீயர் கோஷ்டியினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை பாடிய படி சென்றனர்.

இவர்களை பின் தொடர்ந்து 16 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் நடனமாடியபடி செல்ல, உற்சவ மூர்த்திகளின் மாட வீதி உலா மிக சிறப்பாக நடந்தது. இன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author