இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி  

21வது ஆசியான்-இந்தியா மற்றும் 19வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்டோபர் 10) இரண்டு நாள் பயணமாக லாவோஸ் சென்றார்.

தனது பயணம் ஆசியான் நாடுகளுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது புறப்பாடு அறிக்கையில், இந்தியா ஆக்ட் ஈஸ்ட் கொள்கையை தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் விரிவான மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், ஒத்துழைப்பின் எதிர்கால திசையை பட்டியலிடவும் ஆசியான் தலைவர்களை சந்திக்க உள்ளேன்.” என்று கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான சவால்கள் குறித்து விவாதிக்க கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வாய்ப்பளிக்கும் என்றும் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author