மனதை திருடிவிட்டாய் பட இயக்குநர் காலமானார்!

Estimated read time 0 min read

மனதை திருடிவிட்டாய் படத்தின் இயக்குநர் ஆர்.டி.நாராயணமூர்த்தி நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார்.

கடந்த 2001ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் படத்தை இயக்கிய ஆர்.டி.நாராயண மூர்த்தி, பல சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author