வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நாளை மறுதினம் புயலாக வலுப்பெற்று, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே 24ம் தேதி காலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகவுள்ள இந்த முதல் புயலுக்கு, “டனா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.