சீனா உருவாக்கியுள்ள உலகின் மிக நீளமான உயர் வேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதை

Estimated read time 1 min read

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட விரைவுச் சுரங்கப்பாதையான தியான்ஷான் ஷெங்லி சுரங்கப்பாதை துளையிடும் பணி டிசம்பர் 30ஆம் நாள் திங்கள்கிழமையன்று முழுமையாக நிறைவு பெற்றது, 22.13-கிலோமீட்டர் நீளமான சுரங்கப்பாதை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்ட பின்னர், தியான்ஷான் மலை தொடரின் மையப் பகுதி வழியாக, வடக்கு மற்றும் தெற்கு சின்ஜியாங்கிற்கு இடையே செல்லக் கூடிய பயண நேரம் 3மணிநேரத்திலிருந்து சுமார் 20நிமிடங்களாக குறையும் என்று குறிப்பிடத்தக்கது.

திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு முதல் கட்டுமானம் வரை, சுற்றுச்சூழல் முன்னுரிமை என்ற கருத்து திட்டக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களிலும் பிரதிபலிக்கிறது.

தவிர, தியான்ஷான் ஷெங்லி சுரங்கப்பாதை திறக்கப்பட்ட பிறகு, பட்டுப்பாதை பொருளாதாரத்தின் முக்கிய பகுதி கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கும், வடக்கு மற்றும் தெற்கு சின்ஜியாங்கின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்து துறையின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் லி சியுடோங் கூறினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author