மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை சமாளிக்க அம்மாநில அரசு ஒரு முக்கிய கொள்கையை பரிசீலித்து வருகிறது.
அதன்படி தனிநபர்கள் கார் வாங்குவதற்கு முன் பார்க்கிங் இடம் உள்ளதா என்பதை நிரூபிக்க, சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் அறிவித்தார்.
முன்மொழியப்பட்ட விதியின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய சர்நாயக், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால், குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை எடுத்துரைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறினார்.