“உக்ரைன் அதிபர் சர்வாதிகாரி….” நாட்டை விட்டே வெளியேறும் சூழல் வரும்…. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரபரப்பு குற்றச்சாட்டு….!! 

Estimated read time 1 min read

உக்ரைன் ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளாக போர் நீடித்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபராக பதவி ஏற்றார். அவரது பதவி காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இந்த நிலையில் உக்ரைன் சட்டங்களின் அடிப்படையில் நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த தேவையில்லை. இதை குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து போர் நீடித்திருக்க ஜெலன்ஸ்கி நாடகமாடியிருக்கிறார்.

உக்ரைன் அதிபர் தேர்தலை நடத்த விடாமல் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு தேர்தல் நடத்தாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்தது. நாங்கள் உக்ரைன்-ரஷ்யா இடையே நடக்கும் போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறோம். அதில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும் போது அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார். போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த தேவையில்லை. போருக்கு உக்ரைன் தான் காரணம் என கூறுவது தவறானது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author