அமெரிக்காவின் புதிய அரசு ஆட்சி அமைந்த ஒரு மாதத்திற்கு பிறகு, சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம், சீன ரேன் மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 38 நாடுகளின் 7586 மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.
இதன் முடிவின் படி, அமெரிக்காவின் புதிய அரசு, அதிக சர்வதேச உடன்படிக்கைகளிலிருந்தும் சர்வதேச அமைப்புகளிலிருந்தும் விலகுவது, வர்த்தக சர்ச்சையை ஏற்படுத்தியது ஆகியவை, உலகளவில் கவலைகளையும் குற்றஞ்சாட்டுகளையும் ஏற்படுத்தின. உள் விவகாரம் மற்றும் தூதாண்மை கொள்கை பற்றிய தேர்வு, இருதரப்பு உறவு, மற்றும் சர்வதேச நிலைமை பற்றிய பாதிப்பு ஆகியவை குறித்து ஜி 7 நாடுகள் குழு மற்றும் அமெரிக்க பொது மக்கள் எதிர்மறை மனப்பான்மை தெரிவித்துள்ளனர்.
புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்க புதிய அரசின் தூதாண்மை கொள்கை, அமெரிக்க-சீன உறவு மீது செல்வாக்கு ஏற்படுத்தும் என்று இக்கருத்து கணிப்பில் கலந்துகொண்ட 40 விழுக்காட்டு பேர் கருதுகின்றனர். இதன் கொள்கை இரு நாட்டுறவு மீது பாதிப்பு ஏற்படுத்தும் என்று 43 விழுக்காடான பேர் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.