ரமலான் நோன்பு தொடக்கம் – நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை!

Estimated read time 0 min read

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கியது.

இதையடுத்து, தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, நாகூர் தர்கா மட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். அப்போது உலக நன்மைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author