சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வரை இயக்கப்படாது என அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரையின் அடிப்படையில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் வருகிற நான்காம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை கேளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.