குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர், தேனி, விழுப்புரம்.
வயதுவரம்பு: 35 முதல் 65 வயது வரை.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம் கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 வருடங்கள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று தொழில் புரிவதாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://dsdcpimms.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கடைசி நாள்: 7.03. 2025
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர்,குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ்,சென்னை – 600 010.விண்ணப்பிக்க