மேட்டுப்பாளையம் – உதகை இடையே வரும் 28-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்!

Estimated read time 1 min read

மேட்டுப்பாளையம் – உதகை இடையே வரும் 28-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினந்தோறும் காலை 7.10 மணிக்கு சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 4 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பயணிகள் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் கோடைக்கால சிறப்பு ரயிலாக வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் ஏப்ரல் 7-ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறுமார்க்கத்தில் சனி மற்றும் திங்கள் ஆகிய கிழமைகளில் கூடுதல் ரயில் சேவை இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author