கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலாவில் கடந்த 2022 நடந்த கூட்டத்தில் பேசி அவர் வீர சாவர்க்கர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே, அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜாராகவில்லை. இதனால் அவருக்கு ரூ. 200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.