சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒரு கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 548 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 150 கிராம் தங்கமும், 3 கிலோ 580 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவையும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் கூறியுள்ளார்.