சீனாவின் வூஹான் நகரில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கான சைனா ஓக் என்ற 2025ம் ஆண்டின் ஊடக சுற்றுப் பயணத்தை சிஜிடிஎன் ஊடகமும், வூஹான் நகர கட்சிக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் இணைந்து துவக்கி வைத்தன.
சீனாவுக்கான வியட்நாம், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்களும், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட செய்தியாளர்களும் இந்நிகழ்வின் த்துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்பப் புத்தாக்கம், சூழலியல், கலாசாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் வூஹான் பெற்றுள்ள வளர்ச்சியை மையப்படுத்தி சீன மற்றும் வெளிநாட்டுக் குழுக்கள் தயாரிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிஜிடிஎன் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட உள்ளன. சீனாவின் நவீனமயமாக்கத்தை சர்வதேச சமூகம் நன்கு அறிந்து கொள்ள இது துணைபுரியும்.
துருக்கியின் டிஆர்டி ஓர்டு ஊடகச் செய்தியாளர் அலிகன் அயன்லார் கூறுகையில், ஊடகம் மற்றும் கதை செல்லுதலுக்கு அணுகல் என்பது மிக முக்கியமான ஒன்று. நாங்கள் வூஹானில் இத்தகைய வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்றார். இந்தோனேசியாவின் டிவீஆர்ஐ ஊடகச் செய்தியாளர் ஹைடயாத் கூறுகையில், ‘சைனா ஓக்’ நிகழ்வின் மூலம் எதிர்கால ஒத்துழைப்புக்கு, குறிப்பாக வூஹானுடன் ஒத்துழைத்து பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், பல புதிய அம்சங்களைக் கண்டறிந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.