சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக்கூட்டத்தின் ஆலோசனைக் குழுவின் 2025ஆம் ஆண்டு கூட்டம் மே 15ஆம் நாள் சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரில் நடைபெற்றது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை உயர்தரமாக முன்னேற்றி, திறப்பு மற்றும் சகிப்புத்தன்மை, பரஸ்பர தொடர்பு, கூட்டு வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட உலகத்தைக் கட்டியமைத்தல் என்ற தலைப்பின் கீழ், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு, வர்த்தக முதலீட்டின் தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்கம், எண்ணியல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.