ஏப்ரல் மாதத்தில் சீனப் பொருளாதாரத்தின் நிலைமை குறித்த அறிக்கையை 19ஆம் நாள் சீனா வெளியிட்டதையடுத்து, சீனப் பொருளாதாரம் உறுதியுடன் கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டது என சர்வதேச ஊடகங்கள் கணித்துள்ளன.
ஐ.நா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், 2025ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வளர்ச்சி மீதான மதிப்பீட்டை சுங்க வரிப் போர் காரணமாக, 2.4விழுக்காடாக குறைத்துள்ளது.
இது ஒப்பீட்டளவில், இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனப் பொருளாதாரத்தின் முக்கிய உற்பத்தி மற்றும் தேவை குறியீடுகளின் அதிகரிப்பு வேகம் கடந்த ஆண்டை விட, குறிப்பிடத்தக்கவாறு அதிகரித்து வலுவான நெகழ்ச்சி மற்றும் பாதிப்பு எதிர்ப்புக்கான பெரும் ஆற்றலைக் வெளிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு முதல், நுகர்வை ஊக்குவிக்கும் சிறப்பு நடவடிக்கையைச் சீனா மேற்கொண்டு வருகிறது. அதோடு, வெளிப்புற ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு வலிமையுடன் ஆதரவளித்துள்ளது. வெளியுலகத்துக்கும் நம்பிக்கை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது.
தவிரவும், சீனாவின் புத்தாக்க சூழல் உலக அளவில் புதிய வளர்ச்சிக்கான உந்து தலை கொண்டு வந்துள்ளது. தற்போது, சீனாவின் ஆய்வாளர்களின் எண்ணிக்கை உலக அளவில் முதலிடத்தையும், முழு சமூகத்தின் ஆய்வுச் செலவுக்கான நிதி ஒதுக்கீடு உலக அளவில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் புத்தாக்கத்துக்கு சாதகமான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.