பண்பாட்டுச் சொத்துக்களின் பாதுகாப்பு பற்றிய மாநாட்டின் தலைமை நாடான சீனா

பண்பாட்டுச் சொத்துக்களின் சட்டவிரோத இறக்குமதி மற்றும் ஏற்றுமதியையும், அதன் உரிமையை மாற்றுவதையும் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி, யுனெஸ்கோ 1970ஆம் ஆண்டு உருவாக்கிய பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளின் 8வது மாநாடு மே 19ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸ் நகரில் துவங்கியது. சீனா முதன்முறையாக இம்மாநாட்டின் தலைமை நாடாக பதவி ஏற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட யுனெஸ்கோவுக்கான சீனாவின் தூதர் நிலை நிரந்தரப் பிரதிநிதி யாங் சின்யூ கூறுகையில், சீனா 1989ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்தது.

அதையடுத்து, உள்நாட்டின் தொல் பொருட்களைப் பாதுகாப்பதற்கான சட்ட அமைப்புமுறையைச் சீனா இடைவிடாமல் மேம்படுத்தி வருவதோடு, பண்பாட்டுச் சொத்துக்களின் சட்டவிரோத விற்பனையை ஒடுக்குவது பற்றிய சர்வதேச ஒத்துழைப்புகளில் ஆக்கமுடன் பங்கெடுத்து வருகிறது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author