சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!

Estimated read time 1 min read

சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் 81-வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்றைய இந்தியா துணிச்சல் மிகுந்த நாடாக விளங்குவதாகத் தெரிவித்தார்.

உலகளாவிய விண்வெளி விமான ஒருங்கிணைப்பில் இந்தியா வளர்ந்து வரும் தலைமையாக உள்ளதெனக் கூறிய பிரதமர் மோடி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்து வருவதாகவும் அதனை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தலைமைப் பண்பு, புதுமை மற்றும் வளர்ச்சியின் சின்னமாக இந்தியா திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author