மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!

Estimated read time 0 min read

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தென் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் காரணமாக, நெல்லை மாவட்டம் கடற்கரை பகுதிகளில் உள்ள கூத்தங்குழி, கூட்டப்பனை, பஞ்சல், இடிந்தகரை, கூடங்குளம், கூடுதாழை, உவரி உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author